தமிழ், தெலுங்கு, கன்னடம்… எல்லா மொழிகளும் ஒன்றுதான் – நடிகர் சதீஷ் நினாசம்

Admin
By
2 Min Read
Disclosure: This website may contain affiliate links, which means I may earn a commission if you click on the link and make a purchase. I only recommend products or services that I personally use and believe will add value to my readers. Your support is appreciated!

வினோத் வி.தோந்த்ளே இயக்கத்தில் உருவாகியுள்ள படம், ‘ரைஸ் ஆஃப் அசோகா’. சதீஷ் நினாசம், சப்தமி கௌடா, பி. சுரேஷ், சம்பத் மைத்ரேயா, கோபாலகிருஷ்ணா தேஷ்பாண்டே, யஷ் ஷெட்டி, ரவிசங்கர் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

லவித் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு, பூர்ணசந்திர தேஜஸ்வி இசையமைத்துள்ளார். பீரியாட்டிக் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகியுள்ள இந்தப்படத்தை, விருத்தி கிரியேசன் – சதீஷ் பிக்சர் ஹவுஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் வர்தன் ஹரி, ஜெய்ஷ்ணவி, சதீஷ் நினாசம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

தமிழ், கன்னடம், தெலுங்கு மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு, சென்னையில் நடைபெற்றது.

நடிகர் சதீஷ் நினாசம் பேசுகையில், ”நான் கன்னடத்தில் ஹீரோ. ஆனால், தமிழகத்தில் என்னை யாருக்கும் தெரியாது. இந்தப் படம், இயற்கையின் ஒத்துழைப்பு காரணமாக தமிழிலும் வெளியாகிறது. இந்த நாள், என் வாழ்க்கையில் மிகச் சிறப்பான நாள். இது என்னுடைய முன்னோர்களின் கனவு. இந்தப் படம் மிகச் சிறப்பாக இருக்கிறது.

என்னுடைய பத்து ஆண்டுகால திரையுலகப் பயணத்தில், பத்து அல்லது பன்னிரண்டு படங்களில்தான் ஹீரோவாக நடித்திருக்கிறேன். ஏனெனில், நான் உணர்வுபூர்வமான கதைகளைத் தேர்வுசெய்து நடிக்க ஒப்புக்கொள்கிறேன். என்னால் வருடத்திற்கு இரண்டு மூன்று படங்களில் நடிக்க முடியாது. அது ரொம்பவும் கஷ்டம். ஏனென்றால், அதற்கு ஏற்ற கதை இல்லை. அதனால், தேர்வு செய்து, காத்திருந்து, அதன்பிறகு படங்களில் நடிக்கிறேன்.

என் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாகத்தான் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன். ஏனெனில், இந்தக்கதை தமிழகம் மற்றும் கர்நாடக மாநில எல்லைப் பகுதியான சாம்ராஜ் நகரை கதைக்களமாகக் கொண்டது.‌ அந்த மண்ணின் நிறம், அந்த மண்ணில் வாழும் மனிதர்களின் நிறம், என்னுடைய நிறம் ஆகிய அனைத்தும் ஒத்துப்போகிறது. அது, தமிழகத்திற்கும் பொருத்தமானதாக இருக்கிறது.‌ அந்த மக்களின் பேச்சு வழக்கில்கூட தமிழ் கலந்திருக்கும்.‌ தமிழ், தெலுங்கு, கன்னடம்… எல்லா மொழிகளும் ஒன்றுதான். உணர்வுகள் ஒன்றுதான்.
இந்த அசோகா உங்களுடைய படம். நீங்களும் ஆதரவு தாருங்கள்.

நான் இந்தப் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகத்திற்கு அதிகாரப்பூர்வமாக அடி எடுத்து வைத்திருக்கிறேன். இந்தக் குழுவினருக்கும், இந்த படத்திற்கும் உங்களுடைய வாழ்த்தையும் ஆதரவையும் தாருங்கள்.

கர்நாடகாவில் வெளியாகும் எல்லா தமிழ்ப்படங்களையும் நான் பார்ப்பேன். அங்கு, தமிழ்ப்படங்களுக்கென தனி ரசிகர் கூட்டமும் உண்டு. அந்த வகையில், எங்களுடைய ‘ரைஸ் ஆஃப் அசோகா’ படமும் தமிழகத்தில் வெற்றிபெற வேண்டும் என விரும்புகிறேன் ” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *