சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் விசில் எடுத்து செல்ல தடை விதித்து உள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்து உள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை பார்க்க வந்த ரசிகர்கள் எடுத்து வந்த விசிலை காவல்துறையினர் பறிமுதல் செய்தது பேசு பொருளானது.
இதையடுத்து மைதானத்திற்குள் ரசிகர்கள் கொண்டு செல்ல தடை செய்யப்பட்ட பொருட்களுக்கான புதிய பட்டியலில் விசில் இடம் பெற்றுள்ளது என்று கிரிக்கெட் சங்கம் தெரிவித்து இருக்கிறது.
