அசாம் மாநிலம் திப்ருகார் மாவட்டத்தில் அவசர காலத்தில் விமானங்கள் தரையிறங்கும் வசதி கொண்ட புதிய நெடுஞ்சாலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அவர் சென்ற சி-130ஜே ரக விமானம் நேரடியாக அந்தச் சாலையில் தரையிறங்கி சாதனை படைத்தது. போர் மற்றும் பேரிடர் காலங்களில் ராணுவ விமானங்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட வடகிழக்கு இந்தியாவின் முதல் ஓடுதளம் இதுவாகும்.
