சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் வலது கண் பார்வை 85 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறை அதிகாரிகளின் அலட்சியத்தால் ரத்த உறைவு ஏற்பட்டு பார்வை குறைந்ததாக அவரது வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து வரும் 16-ம் தேதிக்குள் மருத்துவக் குழு அமைத்து அறிக்கை தர நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
